Trichy Highway Robbery Case: Vijay Booked Under Goondas Act | Trichy Insight
திருச்சி-மதுரை நெடுஞ்சாலையில் கார் கண்ணாடியை உடைத்து நகையை பறித்த வழக்கில், பிரபல சரித்திர பதிவேடு குற்றவாளி விஜய் என்பவரை குண்டர் சட்டத்தில் போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.
June 6, 2026. திருச்சியில நெடுஞ்சாலைகள்ல வண்டி ஓட்டுறவங்களை டார்கெட் பண்ணி கொள்ளையடிக்கிற கும்பல் வாலாட்டினா, அவங்களை சும்மா விடமாட்டோம்னு திருச்சி மாவட்ட போலீசார் இப்போ அதிரடி ஆக்ஷன்ல இறங்கியிருக்காங்க. அந்த வரிசையில, கார்ல தூங்கிக்கிட்டு இருந்தவங்களை மிரட்டி, காரை அடிச்சு உடைச்சு கொள்ளையடிச்ச கேஸ்ல, திருச்சியை கலக்கிக்கிட்டு இருந்த ஒரு பிரபல ரவுடியை இப்போ குண்டர் தடுப்பு சட்டத்துல தூக்கி உள்ளே வச்சிருக்காங்க. இந்த சம்பவம் திருச்சி மற்றும் மதுரை ஹைவே ஏரியாவுல பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கு.
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த வெங்கட்ராமன் அப்படிங்கிறவர் அவரோட கார் டிரைவர் கார்த்திகேயன் கூட சேர்ந்து, போன பிப்ரவரி 16-ஆம் தேதி நைட்டு கார்ல மதுரைக்கு கிளம்பியிருக்காரு. நள்ளிரவு டைம்ல திருச்சி-மதுரை நேஷனல் ஹைவேயில கார் போய்க்கிட்டு இருந்தப்போ, டிரைவருக்கு பயங்கரமா தூக்கம் சொக்கியிருக்கு. இதனால வேற வழி இல்லாம, துவரங்குறிச்சி போலீஸ் ஸ்டேஷன் லிமிட்ல இருக்குற கல்லுப்பட்டி அப்படிங்கிற ஏரியா பக்கத்துல, நள்ளிரவு ரெண்டரை மணிக்கு காரை ரோடு ஓரமா நிறுத்திட்டு ரெண்டு பேரும் அப்படியே உள்ளேயே தூங்கியிருக்காங்க.
இதை நோட்டம் போட்ட மதுரை பகுதியை சேர்ந்த கொள்ளை கும்பல், கார் கண்ணாடியை சடசடனு அடிச்சு உடைச்சு உள்ளே இருந்த வெங்கட்ராமனை மிரட்டியிருக்காங்க. கண்ணிமைக்கும் நேரத்துல அவர் கழுத்துல இருந்த ஏழரை பவுன் தங்க செயின் மற்றும் பாக்கெட்ல இருந்த 5 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிச்சுக்கிட்டு அந்த நள்ளிரவுல எஸ்கேப் ஆகிட்டாங்க. இந்த பயங்கர வழிப்பறி சம்பவம் குறித்து வெங்கட்ராமன் துவரங்குறிச்சி போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் பண்ணாரு. போலீசார் உடனே களத்துல இறங்கி, இந்த நள்ளிரவு கொள்ளையில ஈடுபட்ட வைரமணி, மணிசங்கர், கணேஷ்பாண்டியன், கார்த்திக் மற்றும் விஜய் ஆகிய 5 பேரையும் தேடிப்பிடிச்சு அரெஸ்ட் பண்ணி ஜெயில்ல அடைச்சாங்க.
கைதான இந்த 5 பேர்ல கார்த்திக், வைரமணி ஆகிய ரெண்டு பேர் மேல ஏற்கனவே குண்டாஸ் பாய்ஞ்சிருக்கு. இந்த நிலைமையில, இந்த கேஸ்ல கைதாகி ஜெயில்ல இருக்குற சரித்திர பதிவேடு குற்றவாளியான விஜய், வெளிய வந்தா திரும்பவும் இந்த மாதிரி வழிப்பறியில ஈடுபடுவாருன்னு போலீசாருக்கு தோணியிருக்கு. இதனால அவரை குண்டர் சட்டத்துல அடைக்க, திருச்சி மாவட்ட எஸ்பி டோங்கரே பிரவிண் உமேஷ், மாவட்ட கலெக்டருக்கு ஸ்ட்ராங்கா ரெகமண்ட் பண்ணாரு. எஸ்பியோட ரிப்போர்ட்டை செக் பண்ணுன திருச்சி மாவட்ட கலெக்டர் பிரத்திக் தாயள், வழிப்பறி ரவுடி விஜய் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ஆக்ஷன் எடுக்க வெள்ளிக்கிழமை அன்னைக்கு அதிரடியா உத்தரவு போட்டாரு. கலெக்டரோட இந்த ஆர்டர் காப்பி இப்போ ஜெயில்ல இருக்குற குற்றவாளி விஜய்கிட்ட ஒப்படைக்கப்பட்டிருக்கு.
Hashtags: #TrichyInsight #TrichyNews #GoondasAct #Thuvarankurichi #TrichyCrime #HighwayRobbery #TrichyPolice #MaduraiHighway #RowdyVijay #CrimeUpdates #TrichyDistrict #LawAndOrder
Socials: Handles: @trichyinsight @trichyinsight