Trichy Navalpattu Electric Crematorium Not Working | Trichy Insight
திருவெறும்பூர் அருகே நாவல்பட்டில் ரூ. 2 கோடியில் கட்டப்பட்ட கேஸ் மின் மயானம் கடந்த ஒரு வருடமாக பழுதடைந்து கிடப்பதால், இறுதி சடங்கு செய்ய முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
June 14, 2026. திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள நாவல்பட்டு அண்ணா நகர் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கடந்த ஒரு வருடமாக ஒரு மிகப்பெரிய பிரச்சனை நீடிச்சுக்கிட்டே வருது மக்களே. கடந்த 2021 மற்றும் 2022-ம் நிதி ஆண்டுல எஸ்சிபிஏஆர் (SCPAR) திட்டத்தின் கீழ் சுமார் ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, நாவல்பட்டில் எல்பிஜி கேஸ் எரிவாயு மயான தகன மேடை ஒன்னு ரொம்ப பிரம்மாண்டமா கட்டப்பட்டுச்சு. மக்கள் எல்லாரும் ரொம்ப நாளா எதிர்பார்த்த இந்த மின் மயானம், கடந்த 2024 ஜூலை மாசம் தான் அதிகாரப்பூர்வமா திறந்து வைக்கப்பட்டது. ஆனா என்ன பிரயோஜனம், ஓபன் பண்ணி கொஞ்ச நாள்லயே இந்த மின் மயானம் பழுதடைந்து இப்போ ஒரு வருஷமா அப்படியே மூடிக்கிடக்கு.
நாவல்பட்டு, அண்ணா நகர், சோழமாதேவி, சூரியூர், கும்பக்குடி, பூலாங்குடி, துப்பாக்கி தொழிற்சாலை (OFT), போலீஸ் காலனினு இந்த சுற்றுவட்டாரத்துல ஏகப்பட்ட கிராமங்கள் இருக்கு. இந்த பகுதிகள்ல யாராவது நோய்வாய்ப்பட்டோ அல்லது விபத்து காரணமாகவோ மரணம் அடைஞ்சா, அவங்களை முறைப்படி தகனம் செய்ய இப்போ மக்கள் ரொம்பவே கஷ்டப்படுறாங்க. கிராமங்கள்ல சுடுகாடு, இடுகாடுகள் இருந்தாலும், இன்னைக்கு இருக்குற அவசர உலகத்துல ஒரே நாள்ல எல்லா சடங்குகளையும் முடிச்சுட்டு சடலத்தை மின் மயானத்துல எரிக்கத்தான் பெரும்பாலான பொதுமக்கள் விரும்புறாங்க. நாவல்பட்டு மின் மயானம் ஒர்க் ஆகாததால, வேற வழியே இல்லாம திருச்சி டவுன்ல இருக்குற ஓயாமரி மின் மயானத்துக்கு பாடியை தூக்கிட்டு போக வேண்டிய நிலைமை இருக்கு.
நாவல்பட்டுல இருந்து திருச்சி ஓயாமரி சுடுகாட்டுக்கு போகணும்னா பல கிலோமீட்டர் டிராவல் பண்ணனும். அதோட அங்க ஏற்கனவே ஏகப்பட்ட பாடி வெயிட்டிங்ல இருக்கும். ஒரு நாளைக்கு இத்தனை சடலங்கள் மட்டும்தான் எரிக்க முடியும்னு லிமிட் இருக்குறதால, நம்ம ஊர் மக்கள் அங்க போய் மணி கணக்குல, சில நேரங்கள்ல நாள் கணக்குல காத்துக்கிடக்க வேண்டிய கொடூரமான சூழ்நிலை ஏற்படுது. இதனால நாவல்பட்டு மக்களுக்கு அலைச்சலும், மன உளைச்சலும் வர்றதோடு மட்டுமில்லாம, வண்டி வாடகைனு ஏகப்பட்ட பண விரயமும் ஆகுது. ஆரம்பத்துல இந்த பிரச்சனைக்கு தீர்வு காணத்தான் அப்போதைய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷிடம் மக்கள் கோரிக்கை வச்சு, இந்த 2 கோடி ரூபாய் ப்ராஜெக்ட்டை கொண்டு வந்தாங்க. ஆனா அதிகாரிகளின் அலட்சியத்தால இப்போ அது வீணா போய்க்கிட்டு இருக்கு.
மயானம் பழுதானது குறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திடமும், திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடமும் பொதுமக்கள் பலமுறை கம்ப்ளைன்ட் பண்ணிட்டாங்க. ஆனா அவங்க இதைப்பத்தி கவலைப்படாம ரொம்பவே அசால்ட்டா இருந்துட்டாங்க. இதற்கிடையில தமிழ்நாட்டுல இப்போ புதிய ஆட்சி வந்த பிறகு, இப்போ இருக்குற அதிகாரிகள் கிட்ட மக்கள் கேட்டதுக்கு, "பழுதான மெஷின்களை சரி செய்ய எவ்ளோ செலவாகும்னு எஸ்டிமேட் போட்டு ஃபண்ட் கேட்டு அனுப்பியிருக்கோம், கவர்மெண்ட் காசு கொடுத்தாதான் சரி பண்ண முடியும், அதுவரைக்கும் ஒன்னும் பண்ண முடியாது" அப்படின்னு ரொம்பவே கூலா பதில் சொல்றாங்களாம். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், இனியும் காலம் தாழ்த்தாம போர்க்கால அடிப்படையில் நாவல்பட்டு மின் மயானத்தை உடனே ரிப்பேர் பண்ணி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரணும்னு அரசுக்கு ஸ்ட்ராங்கா டிமாண்ட் வச்சிருக்காங்க.
Hashtags: #TrichyInsight #TrichyNews #NavalpattuCrematorium #ThiruverumburNews #TrichyCivicIssues #PublicSuffering #TrichyCorporation #NavalpattuAnnaNagar #OyamariCrematorium #TrichyUpdates #LocalGrievance #TamilNaduGovernment2026
Socials: Handles: @trichyinsight @trichyinsight